என் இனிய இயந்திரா - சுஜாதா - நூல் - 2
நாம் அறிவியலை எந்த அளவிற்கு அறிந்து
வைத்திருக்கிறோம் என்று கேட்டால், பெரும்பாலானோர் என்ன பதில் தருவார்கள்?. இன்றைய காலம்
நம்மை அடிப்படை அறிவியலிலிருந்து விலக்கியே வைத்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.
நவீன அறிவியலை நமது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளாமல், நம்மை அடிமைப் படுத்தும் சாதனமாக
உருமாற்றி கையிலும் மடியிலும் சுமந்துகொண்டு திரிகிறோம். ஆனால் நவீன அறிவியலை பயன்படுத்தி
ஒரு நகரத்தை இப்படியும் வடிவமைக்க முடியும் என்பதை எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில்
எழுதப்பெற்ற ஒரு அறிவியல் புனைவு நூலை இன்று அறிமுகம் செய்துகொள்வோம்.
“என்
இனிய இயந்திரா” எனும் நூல் எழுத்தாளர் சுஜாதா அவர்களால் எழுதப்பட்டது, கணினித்துறை
தன் கால்களை அகலப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டது. மனிதனின் அத்தனை வேலைகளையும்
ஒரு எந்திரம் செய்யத் தொடங்கினால்?.
சுஜாதா
ஒரு அறிவியலாளர், எழுத்தாளர், திரைபடத்திற்கு வசனம் எழுதுபவர் என பன்முகம் கொண்டவர்.
திரைத்துறையில் இவரை அதிகமாக பயன்படுத்திக் கொண்டவர் இயக்குனர் சங்கர். என்ன எந்திரன்
படம் நினைவில் வருகிறதா?. இந்த படத்திற்கும் நாவலுக்கும் நிச்சயம் அதிக தொடர்பு உண்டு.
நிலாவுக்கும் சிபிக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள அரசிடமிருந்து அனுமதி கடிதம் கிடைப்பதில் நாவல் தொடங்குகிறது. ரவி
என்ற தனிமனிதன் அரசாங்கம் அனுமதியோடு வாடகைக்கு கிடைத்த அறைக்கு வருகிறான். இவனோடு
ஒரு எந்திர நாயும் (ஜீனோ) உள்ளது. தமிழகத்தை ஜீவா எனும் சர்வாதிகாரி ஆட்சி செய்யும்
நவீன காலகட்டம். இந்தியாவை யார் ஆட்சி செய்கிறார்கள் என்று குறுக்கு விசாரணை செய்யாமல்
தொடர்ந்து வாசித்தால் தொழில்நுட்பத்தில் மிளிரப்போகும் அல்லது மிளிர வாய்ப்பற்றுப்
போகும் சென்னையை பார்க்க முடியும். இந்த நகரில் மனிதர்களுக்கு பெயர்கள் கிடையாது ஆனால்
எண் உண்டு. சொந்த வீடு கிடையாது, குப்பை அள்ளும், சாக்கடை அள்ளும் வேலையும் கிடையாது,
அத்தனையும் எந்திரங்களால் செய்விக்கப்படுகிறது. சுரங்கத்தில் போகும் தொடர்வண்டியும் இருக்கிறது.
இந்த
கதையின் நாயகன் ஜீனோ தான் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லாமல் கதை நகர்கிறது. ரவி வாசிக்கும்
அத்தனை புத்தகங்களையும் வாசித்துவிடும் ஜீனோ சிந்திக்கும் ஆற்றலையும் பெற்றுவிடுகிறது.
சர்வாதிகார
ஆட்சிக்கு எதிராக மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் ஒன்று செயல்படுகிறது, ஜீனோவின் துணையோடு
சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி மக்கள் ஆட்சி நிறுவுவதுதான் கதையின் பின்புலம்.
கீழிருக்கும் இணைப்பை பயன்படுத்தி நாவலை (PDF) பதிவிறக்கம் செய்து வாசியுங்கள். மறக்காமல் கருத்து பதிவு செய்யுங்கள் உறவுகளே...
http://www.mce89.com/_ld/0/66_En_Iniya_Endhir.pdf
சுஜாதாவின் மேலும் பல நூல்களை இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
https://drive.google.com/folderview?id=0B42iwZpbSKqQfmlJZlJKb3pqbHdseDlkSkVnVlp6SUFvQWp2RXU3ZXNhR3IxSnRkc0IxZ1k&usp=sharing
0 comments :