.

All About Keelapavoor

Showing posts with label Tourist Place. Show all posts

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ரஉத்சவ விழா

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் விழாவில் புண்யாகவாசனம் , பகவத் பிரார்த்தனை நாம சங்கீர்த்தனம் சயனசேவை ,மற்றும் பவித்திர ஹோமம் ,பெருமாள் , விஷ்வக்சேனர் ஆகிய சுவாமிகளுக்கு பவித்ரமாலை சமர்ப்பணம் என பவித்ரஉத்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது


ஆடி ,ஆவணி ,புரட்டாசி (விஷ்ணு பஞ்ச தினம் )திருவோணம் ,துவாதேசி,அம்மாவாசை , உள்ளிட்ட நாட்களில் இந்த உற்சவம் நடைபெறும். 

இந்த உற்சவத்தின் கலந்துகொண்டவர்கள் இறைவனிடம் எந்த கோரிக்கையும் வைக்க வேண்டியதில்லை அந்த நேரத்தில் சந்நிதியில் இறைவனை தரிசித்தாலே நம் கோரிக்கைகள் நிறைவேறும் இறைவனுக்கு சாத்தப்பட்டபவித்திரமாலையால்இறைவனுக்கே மென்மேலும்  பொலிவையும் சக்தியையும் அவருக்கே தர வல்லது இறைவனுக்கு சமர்பிக்கப்பட்ட பவித்திரமாலை உற்சவத்தில் கலந்து கொண்ட பக்த்தர்களுக்கு  பிரசாதமாக வழங்கபட்டது பூஜைகானஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில் பக்த்தர்கள் செய்திருந்தனர்

News: PIRAMA NAYAGAM
Learn more »

கீழப்பாவூர் பெரியாண்டவர் கோவில் தல வரலாறு


      கீழப்பாவூரில் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் பெரியாண்டவர் பெரியசாமி. விஷ்ணுவின் அம்சமாக இங்கு பெரியாண்டவர் காட்சி தருகிறார். ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பெரியாண்டவர் கோவிலை ஆலிக்கோவில் என்றும் யானைக்காரன் கோவில் எனவும் அழைக்கிறார்கள். ஆதியில் இந்த கோவில் தோன்றியதால் இந்த கோவில் ஆதி கோவிலாகி பின்னர் ஆலி கோவில் என மருவியிருக்கலாம் என கருதப்படுகிறது. யானைக்கும் பிரதான பூஜை இங்கு நடப்பதால் யானைக்காரன் கோவில் என்கின்றனர். ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் படி அளக்க சென்றிருந்தபோது அங்கு வந்த திருமால் சிவன் ஆசனத்தில் அமர்ந்தாராம். அப்போது அங்கு வந்த சிவபெருமான், தனது இருக்கையில் இருந்த திருமாலை பார்த்து, ஆராய்ந்து பாராமல் அபயம் என வருவோருக்கு வரம் கொடுப்பவன் நான். ஆனால் அவற்றை ஆய்ந்து அதனால் ஏற்படும் பிரச்சினைகளை களைந்து பக்தர்களை காப்பவர் நீர். எனவே நீதான் பெரிய ஆண்டவர் என அருளாசி வழங்கினார்.
அன்று முதல் திருமாலுக்கு பெரியான்டவர் என்ற பெயரும் வழங்கலாயிற்று. கீழப்பாவூர் பெரியாண்டவர் கோவில் தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. இங்கு வீற்றிருக்கும் பெரியாண்டவர் சிறந்த போர் வீரர். நீயாயம், தர்மம் நீதிகாக்க பாடுபட்டவர். கேரள‌மன்னன் ஆட்சியில் யானைப்படையின் தளபதியாக இருந்தவர் பெரியாண்டவர் என்கிறார்கள் இப்பகுதி பெரியவர்கள். விஷ்ணுவின் அவதாரமாகவே இவர் கருதப்படுகிறார்.





ஒரு காலத்தில் கேரளாவில் பெண்களுக்கும், சான்றோர்களுக்கும் எதிரான கொடுமைகள் இழைக்கப்பட்டபோது பல அங்கிருந்து இடம்பெயர்ந்து கடலோரமாக திருச்செந்தூர், உடன்குடி, குரும்பூர் பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்களுடன் பெரியாண்டவரும் அவரது யானைப்படையுடன் சான்றோர்களுடன் வந்தாராம். குரும்பூர் பகுதியில் இருந்து சிவகாமி என்ற பெண் தனது கணவர் மற்றும் பலருடன் இடம்பெயர்ந்து இன்றைய கீழப்பாவூர் பகுதிக்கு வந்தனர். அப்போது இந்த பகுதி காடாக காட்சி அளித்தது. சிவகாமி அம்மையாருக்கு 5 மகன்கள். அவர்களுக்கு சிவகாமி அம்மாள் பல்வேறு கலைகளையும் கற்று கொடுத்ததோடு, அங்கு கிடந்த இடங்களை திருத்தி நெல் விளைவிக்க செய்தார்.

காட்டுப்பகுதியில் சிவகாமி அம்மாள் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தபோது அவருடன் பெரியாண்டவரும் தனது பரிவார தேவதைகளுடன் இங்கு வந்ததுள்ளார். சிவகாமியிடம் தான் இங்கு தங்கப்போவதாகவும், தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் உணவளிக்குமாறும் கேட்டார். அங்கு நின்ற தெய்வங்களை கண்ட சிவகாமி அம்மாள் "இவர்கள் எல்லாம் அசைவம் சாப்பிடுவர்களை போல இருக்கிறீர்கள். என்னால் உங்களுக்கு அசைவம் தர இயலாதே" என்றார். அதற்கு பெரியாண்டவரும் அவருடன் வந்த தெய்வங்களும் "நீங்கள் அன்பாக தரும் உணவை உண்டு உங்களுடனே இருக்கிறோம்" என்று அங்கு நிலையம் கொண்டனர். அந்த இடம்தான் தற்போது பெரியாண்டவர் கோவில் அமைந்துள்ள பகுதி. இங்கு பெரியாண்டவர் பெரியசாமியாக விஸ்வரூப கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

விழா காலங்களில் இவருக்கு மாலைகள் மலைபோல் வந்து குவிவது ஆச்சரியமானது. மலர் மாலைகளுடன் பழ மாலை, பண மாலையும் இவருக்கு பக்தர்கள் அணிவிக்கிறார்கள். இங்கு அனைத்து தரப்பினருமே வந்து பெரியசாமியை வணங்கி வருகிறார்கள்.  பெரியசாமியின் வலது பக்கம் ராமர், ஆஞ்சநேயர் இடதுபுறம் சிவனணைந்தபெருமாள், பார்வதி, லட்சுமி தேவி ஆகிய தெய்வங்கள் உள்ளன. பெரியாண்டவரின் இடப்புறமாக அழகிய யானை காட்சியளிக்கிறது. இதை அடுத்ததாக சங்கிலிபூதத்தார், பேச்சியம்மன் சன்னதி உள்ளது. பெரியாண்டவர் போல சங்கிலி பூதத்தாரும் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறார். எதிரே சாஸ்தா பூரண புஷ்கலையுடன் காட்சி தருகிறார். சைவ, வைணவ வழிபாட்டுக்கு ஒற்றுமைக்கு இலக்கணமாக இங்கு சிவ வழிபாடும், பெருமாள் வழிபாடும் கலந்தே நடைபெறுகிறது. விழா காலங்களில் நாட்கள் கோவில் சார்ந்த யாரும் அசைவம் சாப்பிடுவது இல்லை. கடுமையான விரதம் மேற்கொண்டு பெரியாண்டவரை வணங்குகிறார்கள்.இந்த கோவிலில் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் பூஜைகள் நடக்கின்றன. பெரியாண்டவர் முன்பு தேங்காய் உடைத்தே எல்லா சன்னதிகளுக்கும் கொண்டு சென்று படைக்கப்படுகிறது.

===================================

சிவகாமி மைந்தர்கள்

ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கீழப்பாவூர் பகுதி காடாக இருந்தது. பின்னர் சிவகாமியின் மகன்களின் குடும்பங்கள் பல்கி பெருகி ஊர் வளர்ந்தது. ஊரில் இருந்து வெளியிடங்களுக்கு பலர் இடம்பெயர்ந்து அங்கும் பெரியாண்டவர் புகழை பரப்ப தொடங்கினர். இன்று 86 கிராமங்களில் இந்த கோவிலை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கோவில் விழாவின்போது கீழப்பாவூரில் கூடுவது சிறப்பு. இந்த கோவிலை சார்ந்தவர்கள் கீழப்பாவூரில் ஆதியில் குடியிருந்த மக்கள் என்பதால் இவர்களை நாட்டாமை வகையறா என்றும் அழைக்கிறார்கள். பெரியாண்டவர் கோவில் கொண்டு அருளாட்சி புரிய காரணமாக இருந்த சிவகாமி அம்மையாருக்கும் இந்த கோவிலில் வழிபாடு நடக்கிற‌து. இவரது சன்னதி பெரியாண்டவரின் நேரே பின்புறம் அமைந்து உள்ளது.

=========================================

வளரும் யானை

கீழப்பாவூர் பெரியாண்டவர் சன்னதியில் உள்ள யானை தொடக்கத்தில் கோவில் உருவானபோது சிவகாமி அம்மாளின் வெற்றிலை பெட்டியில் இருந்து மிக சிறிய அளவில் இருந்ததாம். கோவிலில் பெரியாண்டவர் அமர்ந்ததும் அந்த இடத்தில் சிவகாமி அம்மாள் அந்த சிறிய யானையை எடுத்து தரையில் வைத்தார். அதன்பிறகு அந்த எடுக்க முடியவில்லை. யானை நாளுக்குநாள் வளர தொடங்கியது. இன்று வரை யானை வளர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது 5 அடி உயரத்தில் இருக்கும் இந்த யானை பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை ஐராவதமாக அள்ளி தருகிறது. பெரியாண்டவர் சன்னதி முன்பு நின்று வேண்டப்படும் அனைத்து காரியங்களும் நிறைவேறுகின்றன. யானைப்படையை பெர்யாண்டவர் வழிநடத்தி சென்றதால் வரது சன்னதியில் இந்த யானை பிரதானமாக உள்ளது.

======================================

குறுமறை நாடு

கி.பி. 530 ஆண்டுகளுக்கு முன் தென்காசியைத் தலை நகராக  கொண்டு அரசாண்ட பராக்கிரம பாண்டியன், தென்காசியில் காசி விசுவநாதர் உலகம்மன் ஆலயம் எழுப்பிய வரலாறு நமக்குத் தெரியும். ஆனால் அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கீழப்பாவூரில் மக்கள் வாழ்ந்தனர் என்கிறது வரலாறு. கீழப்பாவூரை  சுற்றிய கீழப்பாவூர், மேலப்பாவூர், பாவூர்சத்திரம் உள்ளிட்ட இவ்வூர்கள் அடங்கிய பகுதி குறுமறை நாடு என அழைக்கப்பட்டது. அந்த காலத்திலேயே பெரியாண்டவர் கோவில் உருவாகியிருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

=============================




பெரியாண்டவருக்கு மரியாதை

பெரியாண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் மாத முதல் வெள்ளிக்கிழமை நோன்பு போட்டு 2 வது வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். பெரியாண்டவர் விழா முடிந்த பின்னரே கீழப்பாவூரில் சுப நிக்ழச்சிகள் நடக்கிற‌து. முதன்மை தெய்வமான பெரியசாமிக்கு அப்பகுதி மக்கள் முதல் மரியாதை அளிக்கின்றனர் என்பதற்கு இதுவே சான்று.

===============================

பெரியாண்டவர் அற்புதம்...

இந்த ஊரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடத்துக்கு சென்றுவிட்டனர். அவர்களில் ஒரு குடும்பம் சிங்கப்பூரில் குடியேறினர். ஒருமுறை அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மரண‌த்தின் விளிம்புக்கே சென்ற அவருக்கு பெரியாண்டவர் காட்சி அளித்தார். யானை அவரது கனவில் சென்று த‌ண்ணீரை பீய்ச்சியது. உடனே அந்த நபர் குணமானார். ஆனால் அவருக்கு பெரியாண்டவர் பற்றி எதுவும் தெரியாது. ஒருமுறை அவரது கனவில் தோன்றிய இறைவன் கீழப்பாவூரில் கோவில் கொண்டிருக்கும் இடத்தை கனவிலேயே காட்டி வர செய்தார். அன்றில் இருந்து கீழப்பாவூருக்கு அவர் வந்து சுவாமியை வணங்கி செல்வதோடு அன்னதர்மம் மற்றும் கோவில் வளர்ச்சிக்கு நிதி வழங்கி வருகின்றனர். இன்றும் விழா ஆரம்பித்ததும் சிங்கப்பூரில் இருந்து பணம் அனுப்பி வ்டுகிறார்கள்.



Learn more »

கீழப்பாவூர் மாணவி லண்டனில் படிக்க தேர்வு

கீழப்பாவூர் மாணவி லண்டனில் படிக்க தேர்வு

கீழப்பாவூர் சேர்ந்த மாணவி  மணிமேகலா சுரண்டை காமராஜர்  அரசு கல்லூரியில் M.Sc(computer science) படித்து வருபவர் இவர் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில் அரசு செலவில் லண்டனில் 6 மாதம் தங்கி படிக்க தேர்வு பெற்றார்.


வெளிநாட்டு படிப்புக்காக ஆங்கில பேச்சுத்திறன், எழதும் திறன்  உள்ளிட்ட 3 தேர்வுக்கு பின்னர் தான் மாணவி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு சென்று படிக்க மணிமேகலை க்கு ரூ.15 லட்சம் அரசு செலவுசெய்கிறது.

கல்லூரில் இருந்து மாணவி மணிமேகலைக்கு பாராட்டு கடிதம் வழங்கப்பட்டது.

மாணவியின் தந்தை பெயர் வெற்றிவேல் சர்வோதயா நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் மீனாட்சி ஆசிரிய ஆவார்கள்...

சகோதரிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்..

Thanks
Dailythanthi
Learn more »

பாபநாசம் அணை | காரையார் அணை | மணிமுத்தாறு அணை

பாபநாசம் அணை:

      பாபநாசம் அணை 1942-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்டது. இந்த அணை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாபநாசம் அருவிக்கு மிக அருகாமையில் உள்ளது.

சிவபெருமானும் பார்வதி தேவியும் அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய இடமாக இது கருதப்படுவதால், இது ஒரு புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. இதற்கு மரியாதை செய்யும் விதமாக இங்கே நிறுவப்பட்டதுதான் அகஸ்தியர் கோயில்.
மலைகளாலும் மரங்களாலும் சூழ்ந்துள்ள இந்த அணையை பார்க்க ஒரு அழகிய ஓவியத்தை போலத்தான் இருக்கும். அதனாலேயே பல சுற்றுலாப் பயணிகளை இந்த இடம் ஈர்க்கிறது.

காரையார் அணை:

       முண்டந்துறை புலிகள் காப்பக வட்டாரத்தில் அமைந்துள்ள காரையார் அணை அந்த காப்பகத்தின் ஒரு பகுதியே. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க இங்கு படகு சவாரியும் உண்டு.

அரை மணி நேர படகு சவாரி பின்னடை நீரில் பெரிய நீர்வீழ்ச்சியின் சாரல்களுக்கு மத்தியில் நம்மை அழைத்துச் செல்லும். இந்த நீர் வீழ்ச்சியை வானத்தீர்த்தம் என்றழைப்பர்.
இந்த அருவியின் நீரில் மருத்துவ குணநலன்களைக் கொண்ட கனிமங்கள் பலவும் கலந்திருப்பதால் இதுவும் சுற்றலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்கும். இந்த நீர்த் தேக்கத்தில் பல முதலைகளும் உள்ளன.
மணிமுத்தாறு அணை:
மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, பொதிகை மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கம். இயற்கை வளம் கொண்ட இந்த இடம் வண்ணமயமான அழகை கொண்டுள்ளது.

மேலும் இங்கே மலைகளும், தண்ணீரும், ஆகாயமும் ஒன்று சேர்ந்து காணப்படும் அக்காட்சி, அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும். மணிமுத்தாறு அருவி, அணையிலிருந்து சிறிது தூரம் தொலைவில் தான் உள்ளது.
இதுவும் அணையின் அழகிற்கு சிறிதும் சளைத்தது அல்ல. இங்கே நீராடவும் செய்து இயற்கை அன்னையின் அழகிடம் நம் மனதை முழுவதுமாக பறிகொடுக்கலாம்.

Learn more »

Palaruvi Waterfalls


Palaruvi waterfall is situated in Thenmala in Kollam district and is near to Tamil Nadu border. It lies in the Thenmala ranges between dense forests and is across the Kallada river. The word meaning of Palaruvi is ‘stream of milk’ and this waterfall is given this name because it looks like a stream of milk. The water falls from a height of 300 ft and forms a small pool at the bottom. 
It is an important tourist destination. Visitors can enjoy taking a dip in this pool. There are separate places for ladies and children. The best time to visit this waterfall is during monsoon season when the water gushes through the hills. The fall gets dried up during summer season. Guards are posted in this area and use of alcohol is prohibited here. This place is protected under the Palaruvi Vana Samrakshana Samiti. 
The water from this falls is believed to have medicinal properties that are able to prevent several diseases because it comes from the forest. Ayurvedic physicians advise their patients to take a dip in this water. The Thenmala ranges offer an adventurous spot for the tourists. People can do trekking from here. It is a great experience and is equally refreshing. 

It is a single drop, horsetail type waterfall with a total height of 91 metres (299 ft)


How to Reach
District:Kollam
Nearest Bus Station:Kollam bus station,Courtallam,Tenkasi and Sengottai
Nearest Railway Station:Kollam  75 kms, Sengottai 21 Kms, Tenkasi 28 kms
Nearest Airport:Thiruvananthapuram International Airport

Our Keelapavoor Palaruvi  Just 38 km Only
Learn more »

Thenmala Dam Touriest

                       Thenmala is a tourist place near Punalur town, Kollam district in Kerala. It is located about 72 km from Thiruvananthapuram and 36 km from Tenkasi(Tamilnadu), and about 160 m above sea levelThe first eco tourism project in India is located at Thenmala. The Thenmala dam was built across Kallada River. Thenmala is famous for being the shooting location in Malayalam and Tamil movies.


            Thenmala is a small village at the foothills of Western Ghats and predominantly a forest area. The famous Shenduruney Wildlife Sanctuary is the most important ecotourism resource of Thenmala Ecotourism. This Wildlife Sanctuary is of about 100 sq. km. and harbors large varieties of flora and fauna. Thenmala : “Then + Mala” , i.e. in local parlance “Then” means honey and “Mala” means hillock i.e. it mean honey hills. 
The honey collected from Thenmala forest region is of good quality and of high medicinal value because of the unique floristic composition of the forests. 


 Culture Zone 
                             This zone accommodates various activities, which favours Ecofriendly General Tourism. Restaurant, Shop court, Amphitheatre etc help the tourists understand the Kerala cusines, Kerala crafts and natural wealth and Kerala’s Art, Culture etc. An open air Musical Dancing Fountain which is considered, as “Natures Dance” is another major attraction here.

 Nakshatravanam
                                 A garden comprising of 27 trees associated with the 27 birth stars. You will be blessed to see all the 27 trees planted in the garden. Walk along and get more information on the trees. If interested to purchase a book providing the details of Nakshatravanam titled “Stars & Trees-Trees of the Nakshatravanam” it is available at the facilitation Counter at a cost of Rs.250/-. The book published by Thenmala Ecotourism Promotion Society with research support from Tropical Botanical garden and Research Institute, Palode. 

 Butterfly Safari
                             An abode of the butterflies in an open ambience. A garden of host plants for the butterfly has been created enabling the large number of butterfly species of the region to thrive. A guided walk (Safari) along the nature trail of the garden will provide the visitor an opportunity to sight the butterflies and to learn about the butterflies.





 Musical Dancing Fountain 
                                      A synchronized rhythmic ballet of water, sound and light located in the natural surroundings. Such a natural ambience is very rare and hence provides a unique and authentic experience. 


Reaching Thenmala 
      

   Air : Thiruvananthapuram 72 km away. 

    Rail : Sengottai 28km away (Pothigai Express from Chennai)
   Road : 66 km from Kollam town on the Kollam – Shencotta Road, in Pathanapuram taluk of Kollam            district.

 Our Keelapavoor to Thenmala Just 49 km only...
Learn more »

Courtallam Waterfalls

 Travel facts about Courtallam

               Courtallam is the town situated at an elevation of 160 meters (520 ft) on the Western Ghats in Tiruneveli District in Tamil Nadu. Rivers such as Chittar River, the Manimuthar River, the Pachaiyar River and few such perennial rivers flow in this region and many seasonal rivers are also a part of this town. The place is also known as the spa of South India because of the number of waterfalls and resorts that are present in that area and the place is quite close to the nature and is very pleasing also. According to the 2001 census, Courtallam had a small population of 2368, comprising of 49% of males and 51% of females and also the literacy rate is quite high that is 75% which is even higher than the national literacy rate. The majority of the population is Tamil, though the place is quite near to Kerala. Other than natural beauty the place is also very close to the religious beliefs of the people. Along with the waterfalls there are many temples as well, in the city.


                 The place is famous for its waterfalls; there are nine waterfalls in total. The waterfall sights are extremely beautiful. The town is a paradise for nature lovers. There are also many places that one can explore on his visit to the city. The city has something to offer to everyone who visit it.

 Places to see in and around 

   Courtallam Peraruvi-  This waterfall flows from 130 feet that is 60 meters above the ground level and the bathing in this waterfall is available throughout the day. That means 24 hour bathing is available at this waterfall. Kutraleeshwara Temple is quite close to the Main Falls so as a part of their offerings to the Lord Kutraleeshwara in whose memory the temple is built take a dip in the holy water. This fall is also known as the Main Fall.

 Chitraruvi-  This is the thinner waterfall as compared to the Main Falls. There are naturally separate places for both men and women to take bathe. This waterfall is also known as Small Falls and is located at the side of Main Falls.

 Shenbagadevi-  This waterfall is lead by the Chitraruvi Falls. And it takes 30 minutes trekking to reach this waterfall and this place is generally restricted in peak due to the risk of floods. Nearby there is also a temple named Shenbagadevi temple which is dedicated to Shenabagadevi Amman.


 Thenaruvi-  This is considered to be the first waterfall of this place so the water of it is considered to be pure and pious. And it takes 2 hour trekking to reach this place. This is situated above Shenbagadevi. And even this place is restricted during the peak seasons due to the risk of floods. This waterfall is also known as the Honey Falls.






 Fivefalls- This fall is also known as the Five Falls. This is the most visited waterfall among the others. Here one can enjoy to the fullest along with the crowd while taking bathe in this waterfall. This significance of this waterfall is that while falling the water splits into five branches so the place is known Five Falls.









 Old Courtallam Falls- This waterfall is also known as Old Courtallam Falls. The specialty of this waterfall was that the water used to fall in the valley from between the two rocks. For some time the waterfall was closed and the rocks were broken so as to change the course of water flow. But again once the construction was over the waterfall was again opened.



 Tiger Falls-  This waterfall is also known as Puli Aruvi and is artificially constructed and the water of it is used for irrigation. This waterfall is constructed between the Main Falls and Old Courtallam. As the waterfall is a private property so to take bathe here once has to shell out some money.
            There are many places that one sees that are situated near the Courtallam Tenkasi which is a town situated in the foothills of Western Ghats. Also the temples which are there in this city are very renowned. Not only waterfalls but this place is also famous for its temples. It is a paradise for both nature lovers as well as the religious people.

 District : Tiruneveli District
 State :     Tamil Nadu 
 Best Time to visit :  June to September and October to January
 Nearest Airport:  The nearest airport that is situated close to the city of Courtallam is the Tuticorin Airport (TCR) and the distance at which this airport is located is 86 Km that is 53 miles. 
Nearest Railway Station: The place is conveniently connected through railways. Tenkasi is the nearest railway station that is located close to the city and it is situated at a minor distance of 5 Km that is 3.1 miles away from the city.
Languages Spoken :Tamil, Malayalam, English
Learn more »

16 கரங்கள் கொண்ட லட்சுமி நரசிம்மர் ஆலயம் கீழப்பாவூர்

கத்ரு குணங்களைப் போக்கி நிம்மதி தரும் 16 கரநரசிம்மர்!
கீழப்பாவூர் நரசிம்மர் தரிசனம்
பரமசிவன்

                    திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்ததென்பர். ஏனெனில், தன் பக்தன் பிரகலாதனைக் காக்க ஒரு நொடிப்போதில் தோன்றிய அவதாரம்! நரசிம்மருக்கென்று அமைந்த ஆலயங்கள் இந்தியாவில் பலவுண்டு. அவற்றுள் ஒன்றாகப் பழமையும் பெருமையும் கொண்டு விளங்கும் தலம் கீழப்பாவூர்.

இவ்வூரின் மேற்பகுதியில் அமைந்த குடைவரைக் கோவிலில்தான் பதினாறு கரங்களுடன் அருள்புரிகிறார் நரசிம்மர். குடைவரை அமைப்பைக் கொண்டு பார்க்கும் போது இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த கோவில் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மற்ற கட்டிட அமைப்புகள் சோழர் கால பாணியில் அமைந்துள்ளன. எனவே இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்பது தெரிகிறது.

மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரமெடுத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் அந்தத் திருக் கோலத்தைக் காண விரும்பினர் காசிபர், வருணன், ககோஷன் உள்ளிட்ட முனிவர்களும் தேவர்களும். அதற்காகக் கடுந்தவம் புரிந்தனர். அப்போது, "பொதிகை மலைச்சாரலில் மணிமுத்தாறு தீர்த்தத் திற்கு நாற்பது கல் தொலைவில் உள்ள சிந்தா நதிக்கரையில் தவம் புரியுங்கள்' என்ற அசரீரி வாக்கு கேட்டது.

அதன்படி அவர்கள் சிந்தா நதிக்கரையில் பல ஆண்டுகள் தவம் புரிய, அதன் பலனாக மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பதினாறு கரங்கள் கொண்டு நரசிம்ம மூர்த்தியாக உக்கிர சொரூபத்துடன் காட்சி தந்தார். அந்தத் திருக் கோலமே கீழப்பாவூர் கோவிலில் அமைக்கப் பட்டுள்ளது.

இவ்வாலயப் பராமரிப்பாளரும் அர்ச்சகரு மான அனந்தய்யங்கார் இத்தல இறைவனின் பெருமை பற்றிக் கூறும்போது, 

""ஸ்ரீ மகாவிஷ்ணு ஒருவரே பல அவதாரங்கள் எடுத்து வந்து பல தத்துவார்த் தங்களைப் பூவுலகிற்கு உணர்த்தியிருக்கிறார். கிருத யுகத்தில் நரசிம்மராகவும், திரேதா யுகத்தில் ராமராகவும், துவாபர யுகத்தில் கிருஷ்ண ராகவும் அவதாரம் செய்த மகாவிஷ்ணு இக்கலியுகத்தில் அர்ச்சாவதாரமாக பல்வேறு ஆலயங்களில் கோவில் கொண்டுள்ளார்.

அர்ச்சாவதார மூர்த்தி கள் ஜென்ம சாபல்யம் தருபவை. பாவப்பட்ட மக்கள் கடைத்தேற இவ்வாறு ஒரு வாய்ப்பை வழங்குகிறார் பெருமாள்.

அதாவது, "இக்கலியுகத்தில் அர்ச்சாவதார மாகக் கோவில் கொண்டி ருக்கும் என்னை நீ அர்ச்சனை செய்து வழிபட்டால் உன் பாவங் கள் அனைத்தும் நீங்கும். மானிடனே, நீ இதைப் பயன்படுத்திக் கொள்' என்கிறார் மகாவிஷ்ணு.

இந்த ஆலயத்தில் தீப மேற்றி வழிபட்டால் மாபெரும் யாகம் செய்த பலன் கிட்டும் என்பதால், இங்கே நரசிம்மருக்கு தீபமேற்றி வழிபடும் முறை முதன்மையாக உள்ளது.

பொதுவாக ஆகம விதிகளின்படி திருக்குளமானது ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்திருக்கும். ஆனால் இங்குள்ள அமைப்பு வேறுவிதமானது. ஆக்ரோஷம் தணியாமல் வந்தமர்ந்த நரசிம்மரின் சினத்தைக் குளிர்வித்த திருக்குளமாதலால், திருக்குளத்தின்மீது தன் பார்வை படியும்படி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் நரசிம்மர்.

இந்தத் திருக்குளத்தில் மூழ்கி நரசிம்மரை வழி பட்டால் நம்மிடமுள்ள படபடப்பு, ஆத்திரம், கோபம், குரோதம் போன்ற சத்ரு குணங்கள் அகன்று விடும்.


பிரதோஷ காலங்களில் திருக்குளத்தில் மூழ்கி யெழுந்து பெருமாளை வழி பட்டால் கடன் தொல்லை, திருமணத் தடை போன்றவை நீங்குவதோடு, வியாபார அபிவிருத்தி, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட நன்மைகளும் உண்டாகும். இது இங்கு வரும் பக்தர்களின் அனுபவம்.

மேலும் இங்கே அலர்மேலு மங்கை சமேத பிரசன்னவேங்கடா சலபதியும் கோவில் கொண்டுள் ளார். "வே' என்றால் பாவம்; "கடம்' என்றால் அழியும் இடம் என்று பொருள்.  எனவே பாவங்கள் அழியும் இடம் வேங்கடம்; பாவங்களை அழிப்பவன் வேங்கடவன். அத்தகைய வேங்கடவன் இங்கும் கோவில் கொண்டுள்ளதால் இது அனைத்து பாவங் களையும் அழிக்கும் தல மாகிறது. வேங்கடவனின் ஒரு கரம் தன் பாதத்தைக் காட்டிய வண்ணம் இருக்கும். அதாவது, "நீ என் பாதம் பணிந் தால் உன்னை அரவணைத்துக் கொள்வேன்' என்று பொருள். அவன் பாதம் பணிந்தால் கிடைக்காத நன்மைதான் ஏது?'' என்றார் பக்திப் பெருக்கோடு.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வாலயத்தின் பெரும்பகுதி கால மாற்றத்தால் சிதைவடைந்து விட்டது. தற்போது நரசிம்ம பக்த சபையினரின் கட்டுமானப் பொருள் நன்கொடையோடு, பழைய அமைப்பை மாற்றிப் புதிதாய் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் Photos


   -  nakkheeran.in
Learn more »

Tenkasi

Tenkasi ( தென்காசி) is one of the largest municipalities in the Tirunelveli district of Tamil NaduIndia. It is located in the foothills of theWestern Ghats near the Courtallam Waterfalls.Tenkasi is famous for its saaral (சாரல் drizzling). Every year from May–August, people and tourists enjoy the saaral in Tenkasi.The main tourist attraction of Tenkasi is Courtallam, with exotic waterfalls and healing spas.Tenkasi is at the footsteps of Thirikooda Malai (Thiri koodal in Tamil means the convergence of three mountains) - a picturesque place.


Temple

Tenkasi (South Kasi) is famous for its Ulagamman Temple and its Shiva Temple. The Ulagamman temple was built by Parakrama Pandian, but was shattered by lightning. In the 1990s, the temple was restored with much financial assistance of Sivanthi Adithan and others, and it was given a fresh coat of paint again in 2006 by the same philanthropists. However, the first few feet from the ground has not been painted as that part appears to have survived the lightning. The gopuram or the entry gateway remains among the highest in southern Tamil Nadu.And it is the second highest gopuram in Tamil nadu. The main deity here is Kasi Viswanathar (Shiva). This temple has three Sannidhis [a unique aspect] - Sivan, Amman and Murugan Sannidhis. This temple has beautiful sculptures and also has musical stone pillars, that emit notes of different pitch when tapped with fingers. The entrance is really grand, with heavy steps. One could view the majestic Temple Gopuram even while entering the town. The Gopuram of the temple welcomes pilgrims with a pleasant cool breeze straight from the nearby Thirikooda Malai.
Learn more »

Courtallam Season

                                                     The climatic conditions in Courtallam are hot and dry during the summer season. During this time the waterfalls are dry and there is very little rainfall in the area. However during the monsoon season many cascading waterfalls can be seen. The peak season is during the monsoon months and the climate is pleasant during this time. Winter season is a good time to visit the place and the climatic conditions are mild and pleasant. 


Summer season is from early March to late May. During this time temperatures are high. It is advisable to avoid visiting during the summer season. Temperatures range from a minimum of 32°C and can rise up to a maximum of 38°C. Humidity is low during the summer months. May is usually the hottest part of the year. 

Monsoon season is from June to September. During this time temperatures are cooler and a pleasant breeze can be experienced in the town. There might be a constant drizzle during the monsoon season. Temperatures are in the mid twenties during this time. 

Winter months are a good time to visit the place. Temperatures range from a minimum of 24°C and can rise up to a maximum of 32°C.
Learn more »