.

All About Keelapavoor

Showing posts with label kavithai. Show all posts

இயற்கையின் அழகில் பசுமை பாவூர் 2015 சில படங்கள்...



வளர்பருவ கதிர்கள்
ஓரமாய் 
ஒற்றைப் பம்பும்
ஒற்றைக் கிணறின்
ஊற்று நீரும்
சுற்றும்
தென்னைமர
வாழைத் தோப்பும்
செழித்த பாவூர்
Keelapavoor

விவசாயிகள் நடந்துபோன வரப்பு
ஊர்திகளின் சாலையாக வளர்ச்சி

Keelapavoor



Keelapavoor

நட்டு வளர்த்த
நாற்றெல்லாம்
நன்செய் பயிராய்


கதிரவனை 
காக்கைகளை
நீரலையை
சட்டத்தில் கொணர்ந்தவனை
புகழ்வேனா ?

மின்கம்பம் அதை
நீர் நடுவே
நட்டவனை இகழ்வேனா ?

மலட்டுநீரை
மண்டவிட்ட மனிதர்களை
தூற்றுவேனா ?

பெரியகுளத்துக்குத்தான்
விடியலொன்றை
தரவேண்டி
கதிரவனை வணங்குவேனா ?

விடைகொடு யென்
பாவூர் தாயே...








இலை முதல்
தோல் வரை
உணவாகி மருந்துமாகும்
பப்பாளி மரமே..



கதிரவனுக்கும்
கதிர்களுக்குமான
காதலில்
தேகம் படர்ந்த பனி
உருகி ஒழுகுகிறது


பருவம் கடந்து
பக்குவமாய் வளர்ந்து
அறுவடைக்குத் தயாரானேன்
பாங்காய் எனை வளர்த்தவனின்
பசிபோக்க காத்திருக்கிறேன்


உழைப்பவனின் உள்ளங்கையாக
விரிந்து கிடக்கும்
நெற்கதிர்கள்

Keelapavoor


வாழை போல
தன்னைத் தந்து
தியாகியாகுபவன்
விவசாயி ஒருவன் தான்


Keelapavoor

Keelapavoor

Keelapavoor



Keelapavoor

Keelapavoor

படங்கள்: சசி .ஞானசேகரன்
எழுத்து: ஜெ. பாண்டியராஜ்
Learn more »

அவளே தான் .!?

நேற்றிரவு என்
கனவில்
வந்தது அவள்
தானே !?

ஏன் வந்தாள்
சொல்லேது மற்ற
புன்னகையை வீசிச்
சென்றது அவளே
தான்..!!

Learn more »

மக்கள் ஏணி..?!

வணிகம் அது
வான் தொட
ஏணியாய் மக்கள் ..!?
Learn more »

காலம் அது கேள்விதான் !?

வருங் காலமும்
இறந்த காலமும்
சிந்தனைக் குட்படும் போது
நிகழ்காலம் கேள்விக்குள்
தங்கி விடும் ...!
Learn more »

வெண்மையின் பிறப்பிடம்

நதி நீரை
கூவ மாக்கி
அதன் மேலெழுப்பிய
உயர் பாலத்தில்
இறக்குமதி வாகனத்தில்
ஊர்ந்து போகும்
வெள்ளாடை உடுத்திய
வேடர்களே !

நாசி அடக்கி
கடந்து போகும்
நாணயக் காரர்களே !

சற்று நின்று
விழியும் நாசியும்
திறந்து பாருங்களேன் !!

உமது அங்கிகளின்
கறைகள் சலவை பெறுவது
இக்கூவத்தின் கரையில்
தானைய்யா வேடர்களே !!
Learn more »

பாதை மாறிய கனா...

நேற்றைய கனவு 
இன்று 
வெற்று நினைவாகிப் 
போனதே !! 

புதிய பாதை 
அமைக்க முனைந்ததால் 
கன்னத்தில் 
உன்மத்தமாய் அரை விழுந்து 
போனதே !!
Learn more »

உலகம் மாறிட்டா டே !!

காலை கருக்கலுல
நான் எழுந்த
போது நிலவே யில்ல
வானத்துல !

மணி ஆறக்
கடந்த பிறவும்
விடியல இன்னும்
காலம் !

குளிரு மில்ல
மழையு மில்ல
காலையில
கண்ணக் கசக்கி
தெருவுல வீசுனே
பார்வைய !

உற்றாரும்
சுற்றாரும் இல்ல
யோசன செய்ய
புத்தி வேலை
செய்யல !

தேடிப் போனேன்
எதையோ
தூரம் கடந்த பிறவு
நினச்சேன், காணலியே
எங்க ஊரு குளத்த !!

புரியாம தவிச்சுப்
போனேன் !
எனக்கேதும்
ஆகிப் போயிட்டா
இல்ல உலகம்
மாறிப் போயிட்டான்னு !

மணி என்னல
ஆவுதூ..!
அம்மா என்ன வைய
சிலாகித்து எந்திச்சேன் !!

உலகமின்னும்
மாறல டேய்ன்னு
கூப்பாடு போட்டேன் !!
Learn more »

கண் பேசுமா ?

கண் பேசுமா ?

அதிர்வு கொண்டேன் !!

பேசவில்லை ஒரு
சிறு கதை எழுதிச்
சென்றுவிட்டது !!
Learn more »

அறிவிலார்

மௌனம் தன் வசங் கொண்டோர்

யாதும் அறிந்த வருமிலர் - சொல்லால்
பிறர் மனம் வாட செயல்
புரிவோரும் அறி வற்றோரே!
Learn more »

ஏமாற்றம்

பிறப்பில் எதிர்பாரா

ஏமாற்றம் ..
வாழ்வில் தொடர்வது
இயல்பு தான் !!
Learn more »

பட்டா நிலம்

பணம்

படைத்தவன் பத்திரம்
எழுதுகிறான்
பாட்டாளியின் நிலத்திற்கு !!
Learn more »

இறப்பின் மகிழ்வு !!

உடல் கொண்ட உயிர்

அற்றுப் போனது
சுடு காட்டில்!!

சாகா வரம்
வேண்டுபவர்
இழப்பது வாழ்வின்
மகிழ்வைத் தான் !!
Learn more »

ஞாயிறு

சூரியனும் நிலவும்

நம்மை வழி
நடத்துபவை !!

இரவு பகல்
இல்லாமல் போனால்
உலகம் இயங்காது !

ஞாயிறு இல்லை யென்றால்
நவீனத்துவம்
விரைவில் முடிவு
கண்டு விடும் ..!!

ஞாயிறை
வரவேற்ப்போம்
மீண்டுமொரு திங்கள்
பிறக்க !!
Learn more »

மனிதனின் அளவு ..!

பெய்யும் மழையின்

துளி பூமியில்
விழுந்துச் சிதறும்
ஒரு சிதறலின்
அளவே
மனித உயிரினம் !!
Learn more »

ஐக்கூ..

இறந்த என் நாவிற்கு

உயிர் மீட்டவள்
என் அன்னை அவள் !!
Learn more »

ஐக்கூ...

சாலையோரப் பூங்காக்கள்

பூக்க ளில்லாமல்
பூட்டுகளால் பூட்டியுள்ளது !!
Learn more »

மது நஞ்சு ..

வாழ்விய லறியா மூட ரிவர் 

பருகும் மது நஞ்சு - இவனுக்கு
ஈட்டுக் கொடுப்ப தென்ன வாயிருக்கும்
அறமா பொருளா செல்வமா ?!

உட லுடன் ஒத்திசைந்து தன்னுடல்
பேணா யிவன் திருமாலிடம்  - வரம்
வேண்டி பணிதல் என்ன பயனாகும் ?!
Learn more »

திருமணமோ? நிலவுக்கு

நிலவுக்கு இன்று

திருமணமோ?
துணைக்கொரு நட்சத்திரம் கொண்டே
மற்றார் முகம் மறைத்ததே.,
அளவில்லா பொலிவுடன் !!!
Learn more »

மொழியறிவு !!

கல்வி அதன் தேவை அறிந்த

மேன்மக்கள் பயன் அறியா - புழுவாம்
இன்ன வேண்டுமென கூற யியலா
அறிவு தேடுவதோ ஆங்கிலத்தை !

யாது மாகி இருப்பவன் அறிந்த
ஆங்கில மற்று வேறொன்றும் - அறியா
பேதை யிவன் இம்மோகம் விடுத்து
அறிய வேண்டும் தாய்மொழி !
Learn more »

உல்லாச பயணம் ...

தோழர்களுடன் ஒரு நாள் தோழ் சாய்ந்து!!!
வீட்டை மறந்து, காடு மலை கடந்த ..
நெடுந்தொலைவு பயணம் தோழமையுடன்!!!
உள்ளம் ஜில்லிட்டன பனி மழையில் நனைந்த
அந்த அதிகாலை பொழுதில் !!!
உற்சாக கூச்சலுடன் சென்றடைந்தோம்!!!
இயற்கையின் அந்த சொர்க்க மலைக்கு......
Learn more »