.

கீழப்பாவூர் பெரியகுளத்தில் இருந்து நாகல்குளத்திற்க்கு இணைப்பு பாலம்

கீழப்பாவூர், நாகல்குளம்மற்றும்  மேட்டுமடையூர்  உள்ளிட்ட கிராம பகுதிளில் உள்ள சுமார்  2000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது மேலும் கீழப்பாவூர் பெரிய குளத்தில் மழைகாலங்களில் தண்ணீர் அதிகரிக்கும் போது இப்பகுதி விவசாயிகளும் நாகல்குளம் பகுதி விவசாயிகளும் கரையை கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்  இதையடுத்து விவசாயிகள் இப்பகுதியில் இணைப்பு பாலம் அமைக்க வேண்டி நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரனிடம் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து இவர்களின் கோரிக்கையை  ஏற்று கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமையில்  பெரியகுளத்தில் இருந்து  நாகல்குளத்திற்க்கு இணைப்பு பாலம் அமைப்பதற்க்கான ஆய்வினை  பொதுப்பணித்துறை சேர்ந்த செயற்ப் பொறியாளர் காளிராஜ் ,உதவி செயற்ப் பொறியாளர் மதன சுதாகரன் ,உதவிப் பொறியாளர் சுப்பிரமணியபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டனர்  இதுகுறித்து பிரபாகரன் எம்.பி கூறியதாவது 


கீழப்பாவூர்  பெரியகுளம் பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள்  மழைகாலங்களில் கரையை கடந்த விவசாயப் பொருட்கள் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் இதையடுத்து கீழப்பாவூர் பெரிய குளத்தில் இருந்து சுமார் 100 மீட்டர்  நீள இணைப்பு பாலம் அமைப்பதற்க்கான ஆய்வு மற்றும் சாத்தியக்கூறுகள் மேற்கொள்ளப்பட்டன இந்த இணைப்பு பாலம் வருவதன் மூலம் அருகில் உள்ள கிராம மக்கள் இந்த பாலம் வழியாக விவாசய விளைபொருட்களை கொண்டு செல்ல இந்தப் பாலம் மிகவும் பயனுள்ளதாக அமையும் ,இந்த பாலத்திற்க்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பின்பு அதற்க்கு தேவையான நிதி ஒதுக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

  கீழப்பாவூர் ,நாகல்குளம்மற்றும்,கீழப்பாவூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி விஜயகுமார் , மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர் ,தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி தலைவர் கே.ஆர்.பால்துரை ,மாவட்ட கவுன்சிலர் சேர்மப்பாண்டி ,கண்ணன் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
News By: Keelapavoor c Piramanayagam

0 comments :