.

கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக்பை ஒழிப்பு விப்புணர்வு பேரணி

          கீழப்பாவூர்  பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி  செயல் அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார் ,மன்ற தலைவர் பொன் அறிவழகன் தலைமையேற்று கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.


   பேரணியில் ஏ.வி.உயர்நிலைப்பள்ளி ,இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிளாஸ்டிக்மூலம் ஏற்ப்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறி,விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர் பொதுமக்களுக்கு  பேரூராட்சி  சார்பில் துணிப்பைகள் வழங்கப்பட்டன ,
         பேரணியில் ஏவி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ,ஆசிரியர்கள் முருகேசன் ,ஹரிஹர சுப்பிரமணியன் ,சிவகுமார் ,தயுமானசாமி ,இந்து நாடார் பள்ளி ஆசிரியர்கள் களஞ்சியம் ,பயிற்சி ஆசிரியர்கள் தெய்வேந்திரன்,பால சுப்பிரமணியன் , சுடலைமணி ,பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜவகர் ,தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

News: PIRAMA NAYAGAM

0 comments :