.

சிறந்த விஞ்ஞானி விருது கீழப்பாவூரைச் சேர்ந்த ஞானமிக்கேல்பிரகாசம்

கீழப்பாவூரைச் சேர்ந்த  லூர்துஅந்தோணி-செல்வபாக்கியம் தம்பதியினர்  இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுடைய மகன் ஞானமிக்கேல்பிரகாசம். இவர்  ஆர்.சி தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிபடிப்பை தமிழ்வழியிலும்,  பின்பு  பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் படித்துள்ளார். தனது பி.யூ.சி படிப்பை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியிலும், பி.இ படிப்பை மதுரை தியாகராஜர் எஞ்சீனியரிங் கல்லூரியிலும், எம்.டெக் படிப்பை சென்னையில் உள்ள ஐ.ஐ.டி-யிலும் எம்.பி.ஏ படிப்பை அண்ணாமலை பல்கலை கழகத்திலும் படித்து முடித்துள்ளார்.



 இவர் பெங்களூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனதத்தில் (D.R.D.O)  எலக்ட்ரானிக்ஸ் ராடார் மேம்பாட்டு ஆராய்ச்சி ((L.R.D.E) ) அமைப்பில் மூத்தவிஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். 1987-ல் விஞ்ஞானி-"பி"(B)யாக பணியை துவக்கிய இவர் இப்போது விஞ்ஞானி"ஜி"(G) நிலைக்கு உயர்ந்து பணியாற்றி வருகிறார். இவருக்கு மத்திய அரசால் 2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி(Scientist of the Year-2014)  என்ற விருதினை மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர்பாரிக்கரிடம் இருந்து பெற்றுள்ளார் 

ஞானமிக்கேல்பிரகாசம் National Science Award- 2003. Agni Award for self Reliance- 2007   உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும். ராடார்ஆராய்ச்சித்துறையில் 25க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். அதேபோல் "SystemGenerator" என்ற நூலை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடதக்கதாகும். இவரது மனைவி செல்வி பெங்களூரில் ஸ்டேட்பாங்ஆப் இந்தியாவிலும், மகன் ரூபஸ்மிக்கேல் ஆப்பிள் நிறுவனத்திலும், மற்றொறு மகன் அனூஸ் இன்டெல் நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறன்றனர். தமிழ்வழியில் கல்வி கற்ற இந்த சாதனை தமிழனை பாரட்டுவோம்

3 comments :

  1. Sir, v r very proud of you .

    ReplyDelete
  2. Sir, v r very proud of you .

    ReplyDelete
  3. Great. He has proved that education through native language is effective.

    Also it is nice he has studied in government school and college.

    ReplyDelete