.

வாசிப்போம் அறிமுகம் கொள்வோம்..

மனிதன் பிறக்கும் பொழுதே கற்கத் தொடங்கினாலும் கற்றலின் தொடர்தல் என்பது அவன் வாழும் சமூகம் சார்ந்தே நிர்ணயிக்கப்படுகிறது. பிற மனிதர்களிடம் பெறும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ள நம் சமூகம்  பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறது, அந்த அடிப்படைத்தகவல்களை பகுத்தறிய கல்வி என்பது கருவியாக இருந்து வருகிறது. கல்வி என்றவுடன் அது பள்ளியில் கற்றுத்தருவது மட்டுமல்ல, பள்ளிக்கல்வி என்பது வாய்வழியாக தொடர்பு கொண்டிருந்த நம்மை எழுத்துக்களை வாசிக்கவும் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் வடிவமைத்து புதிய தகவல் தொடர்புக்கு நம்மை தயார் செய்யும் ஒரு கூடம். இங்கே சுயகல்வி என்று ஒன்று உள்ளது, அதை நம்மில் எத்தனை பேர் தொடர்கிறோம் என்றால் அதன் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும் என எண்ணுகிறேன் எனது எண்ணம் தவறாகக் கூட இருக்கலாம்.

கீழப்பாவூரில் சமீபத்தில் நூலகம் ஒன்று திறந்திருப்பதாக அறிந்தேன் மகிழ்ச்சியாக உள்ளது, மகிழ்ச்சியை நீட்டிக்கும் விதமாக நமது ஊர் தோழர்களோடு உரையாட இந்த இணையத்தை களமாக பயன்படுத்தி சில புத்தகங்களை அறிமுகம் செய்யலாம் என்று எண்ணுகிறேன். உங்களில் பலரும் புத்தகம் வாசிப்பவராகவும் அதை நாம் ஒருவருக்கொருவர் அறியாமலும் இருக்கலாம். புத்தக வாசிப்பால் தன்னை உணர்வதோடு சமூகத்தையும் உணர்வோம் என்பது இதுவே.




தோழர்கள் தாங்கள் வாசிக்கும் புத்தகம் பற்றிய அறிமுகம் கொடுக்கவிரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது தளத்தின் ஒருங்கிணைப்பாளர் ஞானம் அல்லது எனது முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். இப்போதைக்கு வாரம் ஒரு புத்தக அறிமுகம் செய்யலாம் என்றிருக்கிறோம். உங்களின் ஈடுபாடும் ஆர்வமும் தினமும் ஒன்றை பிரசுரிக்கும் அளவுக்கு வெளிப்பட்டால் மிக்க நன்றியோடு அனைவரையும் வரவேற்க காத்திருக்கிறோம்.

இந்த வாரத்திற்கான புத்தக அறிமுகம் நாளை வெளியிடுகிறோம்.


வாசிப்பு வளமான அறிவார்ந்த சமூகத்தை உருவக்கும் என்பதில் ஐயமில்லை.





சி.ஞானசேகரன் : sasigsasi@gmail.com
ஜெ.பாண்டியராஜ்: rajjeba@gmail.com

2 comments :

  1. நல்ல தொடக்கம் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. தமிழுக்கு ஆதரவு என்றும் உண்டு வாழ்த்துகள்

    ReplyDelete