.

ஏ .வி .உயர் நிலைப்பள்ளியில் 2008 ஆம் ஆண்டு பயின்ற மாணவ/மாணவிகள் முதல் சந்திப்பு விழா

.வி .உயர் நிலைப்பள்ளியில் 2008 ஆம் ஆண்டு பயின்ற மாணவ/மாணவிகள் முதல் சந்திப்பு விழா 15.01.2016 அன்று கீழப்பாவூர் சமுதாய நலக் கூடத்தில் நடை பெற்றது.



இந்த விழாவை பள்ளி நிர்வாகி திரு. .கார்த்திகேய சங்கர ராமன் தலைமை தாங்கினார்இந்நாள் தலைமை ஆசிரியர் திரு ரா.முருகேசன் , ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு..துரைராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்  திரு ச.சுப்பிரமணியன், திருமதி சு.கல்யாணி மற்றும்
திரு ப .பட்டமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 52 மாணவர்கள், 12 மாணவிகள் மற்றும் 12 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

விழாவில் பள்ளிப் பருவ நினைவுகளைப் பலரும் பகிர்ந்து கொண்டனர்.
பள்ளியின் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பள்ளியில் படித்த பழைய மாணவர்களை ஒன்றிணைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவ/மாணவிகள் தங்கள் நன்றிகளை வெளிப்படுத்தினர.

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக,விழாவில் பங்கு பெற்ற ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

நீங்களும் ஏ.வி உயர் நிலைப்பள்ளியில் பழைய மாணவர்/மாணவி எனில் இணையவும்.......


புகைப்படங்கள் 


  


































2 comments :

  1. உங்களின் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete