கீழப்பாவூரில் உலக நன்மைக்காக 1008 தீபம் ஏற்றிய பக்த்தர்கள்
உலக நன்மைக்காக 1008 தீபம் ஏற்றிய பக்த்தர்கள்
கீழப்பாவூரில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவிலில் நேற்று (1-1-2015)அதிகாலை 5.45மணிக்கு ராமநாம பஜனை, 10.30மணிக்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4மணிக்கு பரமபதவாசல் திறப்பும் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி ஆலயத்தை மூன்று முறை வலம் வருதலும், மாலை 5.45மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் ஆலயத்தை சுற்றி உலக நன்மைக்காக பக்த்ர்களால் 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றுதல் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
News - PIRAMA NAYAGAM
0 comments :