.

கீழப்பாவூரில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி


   கீழப்பாவூரில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியை  பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்.


  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு விலையில்லா வேட்டி, சேலையை வழங்கி வருகிறது. அதன்படி கீழப்பாவூரில் மொத்தம் 5100 நபர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கபட உள்ளது. இதன் துவக்கமாக  பிரபாகரன் எம்.பி தலைமை தாங்கி இலவச வேட்டி சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார். 
 
                   இதில் ஆலங்குளம் தாசில்தார் சுகுமார், வருவாய் ஆய்வாளர் மாரிசெல்வம்,, மாவட்ட கவுண்சிலர் சேர்மப்பாண்டி,  யூனியன் துணைத்தலைவர் உத்திரகுணபாண்டியன்,மாநில பேச்சாளர் அப்பாத்துரை, கீழப்பாவூர் நகரசெயலாளர் பாஸ்கர், ஒன்றியகவுன்சிலர்கள் தியாகராஜன், ஆண்டபெருமாள், கிராமநிர்வாக அதிகாரி கார்த்திக்ராஜா ,பிச்சையா  உட்பட  பலர் கலந்து கொண்டனர்

News - PIRAMA NAYAGAM

0 comments :